Monday 20 March 2017

இந்தியாவின் வெற்றி வாய்ப்பு நழுவியது.

ஆஸ்திரேலியா  அணி இந்தியாவில் சுற்று பயணம் 

                      கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. புனேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.அடுத்து பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா பதிலடி கொடுத்தது.


3 வது டெஸ்ட் 


                  இரு அணிகளும்  தலா ஒரு வெற்றி பெற்று தொடர் சம நிலையில் உள்ளது. இந்நிலையில் ராஞ்சியில் 3வது டெஸ்ட் ஆரம்பம் ஆனது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்சில் அந்த அணி 451 ரன்கள் குவிக்க. அடுத்து  விளையாடிய இந்தியா அணி 603 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது.4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 23 ரன்னுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து இருந்தது.

வெற்றி வாய்ப்பு நழுவியது.


               
                     
கட்டாயம் இந்தியா அணி வெற்றியை  தக்க வைக்கும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் 5வது விக்கெட்டுக்கு ஜோடி  சேர்ந்த ஹண்ட்ஸகொம்ப மற்றும் ஷான் மார்ஷ் இந்தியா அணியின் கனவை தகர்த்தது. கடைசி நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 204 ரன்னுக்கு 6 விக்கெட்டுக்களை மட்டும் இழக்க 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

No comments:

Post a Comment